தாத்தா மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தன்னுடைய சேமிப்பு எல்லாத்தையும் சேர்த்து வைத்திருக்க, தாத்தாவிற்கு மருந்து வாங்க பணம் அதிகமாக வருகிறது. ஆனால் கோபி பாக்கியா பணம் கேட்க கொடுக்கமாட்டேன் என சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டில் இருக்கும் இடத்தில் எல்லாம் பணத்தை எடுத்து வைக்கிறார். செல்வியிடம் கொடுத்து எவ்வளவு இருக்கு என கேட்க ஏன் உனக்கு தெரியாத என கேட்கிறார். அப்போது ஜெனி வர அவரிடம் மருந்து சீட்டை கொடுத்து அதை எல்லாம் வீட்டில் வந்து கொடுக்க சொல்லு என சொல்கிறார். அப்போது எவ்வளவு வந்தது என பாக்கியா கேட்க 12ஆயிரத்திற்கு மேல் அவர் சொல்கிறார். பாக்கியா பணம் இல்லாமல் வருத்தப்படுகிறார்.
பின் செழியன் மாடியில் ஜெனி வர செழியன் இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துவிட்டாய் என கேட்கிறார். அப்போது ஜெனி கோவமாக இருக்க, சொந்த குடும்பத்திற்கு செலவு செய்ய நீ இவ்வளவு கணக்கு பார்க்கிறாய் என கேட்கிறார். மறுபடியும் ஆரம்பித்துவிட்டாய் என செழியன் கேட்க, உன்னை நான் காதலிக்கும் போது நீ ரொம்ப மாடல் என நினைத்தேன் ஆனால் நீ இப்படி என் அம்மா போலவே இருக்கிறாய் என சொல்கிறார். அதனால் ஜெனி கோபத்துடன் படு என சொல்கிறார்.
மறுபக்கம் கோபியிடம் பாக்கியா பேச வர என்ன பேச வேண்டும் என சொல்கிறார். அப்போது கோபி என்ன விஷயம் என கேட்க எனக்கு பணம் வேண்டும் என பாக்கியா சொல்கிறார். அப்போது கோபி நான் அப்பாவிற்கு அவ்வளவு செலவு செய்தேன் ஆனால் அதை பற்றி நான் எதுவும் பேசவில்லை இப்போது உனக்கு எதற்கு பணம் என கேட்கிறார். மாமாவிற்கு செலவு எல்லாம் செழியன் தான் செய்தான் என சொல்ல, என் அப்பாவிற்கு என் மகன் செய்வது தவறு இல்லை நீ எதற்கு பணம் கேட்கிறாய் என கேட்க, நான் எனக்காக கேட்கவில்லை மாமாவிற்காக தான் கேட்கிறேன் நான் என்ன சொல்ல வந்தேன் என கேட்க கூட முடியவில்லை என பாக்கியா வருத்தப்பட்டு பேசுகிறார்.
அப்பா வருகையை நினைத்து கனவுடன் இருக்கும் லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
பின் பாக்கியா வருத்தமாக அமர்ந்திருக்க எழில் வருகிறார். நீ இன்னும் துங்கவில்லையா என கேட்க, நான் எப்போது இவ்வளவு சீக்கிரமாக தூங்கினேன் என பாக்கியா சொல்கிறார். பின் எழில் பாக்கியாவிடம் ஒரு பணத்தை கொடுக்கிறார். உனக்கு ஏது இவ்வளவு பணம் என கேட்க எனக்கு சம்பளம் கொடுத்தார்கள் என சொல்கிறார். பின் பாக்கியா நீ ஏற்கனவே நிறைய பணம் கொடுத்திருக்கிறாய் என சொல்ல, பாக்கியா அந்த பணத்தை வாங்கி பார்த்து சந்தோசப்படுகிறார்.