தமிழகத்தில் சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பணப்பட்டுவாடாவில் களமிறங்கிய கட்சிகள்!
தமிழகத்தில் அடுத்த வாரம் சனிக்கிழமை அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் தி.மு.க கட்சி , அதிமுக கட்சி , கூட்டணி கட்சி சார்பில் டோக்கன் முறை மூலம் பணப் பட்டுவாடா நடைபெற்று வருகிறது.
களமிறங்கிய கட்சிகள்:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்து கடந்த வாரங்களில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் தளர்வு அமலில் உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது, முழு ஊரடங்கு தடை, இரவு ஊரடங்கு தடை ஆகியவை அமலில் உள்ளது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வகையில் தேர்தல் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி – கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்!
தேர்தல் பணிகளுக்கு அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அனைத்து கட்சி சார்பில் மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெறுகிறது. தேர்தல் தினத்தன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் வேட்பாளர்கள், நான்கு சுற்று பிரசாரத்தை முடித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி வேட்பாளரும் தங்களுக்கு ஆதரவு அலை வீசும் பகுதிகளில், டோக்கன் வினியோகத்தை செய்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஒவ்வொரு வீதியிலும் நோட்டு போட்டு, வாக்காளர் அட்டை எண்; ஆன்லைன் பணபரிவர்த்தனை மொபைல் போன் எண்களை வாங்கி பதிவு செய்து வருகின்றனர்.
மாநிலத்தில் பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் தி.மு.க வேட்பாளர்கள், கட்சி சின்னம், வேட்பாளர் படத்துடன் டோக்கன் அச்சடித்து, வரிசை எண்ணுடன் வழங்கியுள்ளனர். இதை கொண்டு சென்று ஒவ்வொரு விதிக்கும் அடையாளம் காட்டப்பட்ட நபரிடம் கொடுத்தால், அவர் வாக்காளர்களை கவனித்து கொள்வாராம். மேலும் பெரிய மளிகை கடைகளில், மளிகை பொருட்களை வாங்கவும் வசதியும் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முழு நேரம் பிரசார வேலை செய்பவர் ஒருவரிடம் வாரம் 5000 ரூபாய் கொடுத்து வைத்துள்ளனர். அவர் பிரசாரம் முடிந்ததும், 250 ரூபாயும், சாப்பாடும், மதுபானமும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். இந்த நிலையில் பறக்கும் படையினர் கடமை தவறாமல் பரிசோதனை செய்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் திருவிழாவில், ரகசியமான பட்டுவாடா பணிகள் சத்தமின்றி நடந்து வருகின்றன.