திருப்பதி கோவில் ஜூன் மாத தரிசன டிக்கெட் – இணையத்தில் இன்று வெளியீடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசனம்:
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் நாளை ஆலோசனை!!
ஊரடங்கு காலத்தில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னதாக ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் ஊரடங்கினால் தற்போது வர இயலாது. அவர்கள் அனைவரும் தரிசனத்திற்கு வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா தொற்று காரணமாக இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஜூன் மாத சிறப்பு தரிசனத்திற்காக தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த இணையத்தில் ஜூன் மாத தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.