தமிழகத்தில் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் நாளை ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா கட்டுக்குள் வராததால் மேலும் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் நாளை (மே 22) மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 34 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மே 10 முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று முதல் தினசரி 22 மணி நேரம் முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. எனவே மே 24க்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் அனைத்து கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் 13 பேர், மற்றும் குழு உறுப்பினர்களுடன் 11.30 மணி அளவில் ஆலோசனை நடத்த உள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மாவட்டங்களில் உள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். நேற்று 18 முதல் 44 வயதானவர்களுக்கும் தடுப்பூசி திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவம் சார்ந்த நடவடிக்கை என்ன எடுக்க வேண்டும் என ஆலோசனை மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
Ok sir Muradnagar
Stop giving fake news. Before government decided u itself telling lockdown extended ? Will report this news to sectretrate