தமிழகத்தில் 60 ஆயிரம் ஊதியத்தில் மருத்துவ பணி – இன்று முதல் தேர்வு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொகுப்பூதியம் அடிப்படையில் மருத்துவர்களை நியமனம் செய்ய இன்று முதல் தேர்வு நடைபெற உள்ளது.
மருத்துவர்கள் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா கேர் சென்டர்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்ய தொகுப்பூதியம் அடிப்படையில் மருத்துவர் (எம்.பி.பி.எஸ்.,) முதுநிலை மருத்துவர் (எம்.டி.,) பணியாளர்களை இன்று முதல் தேர்வு செய்ய உள்ளது அரசு. இந்த பணியாளர்கள் அனைவரும் மூன்று மாதத்திற்கு மட்டும் தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றுவார்கள். அதாவது ஆகஸ்ட் 31 வரை மட்டுமே பணியாற்றுவார்கள்.
திருப்பதி கோவில் ஜூன் மாத தரிசன டிக்கெட் – இணையத்தில் இன்று வெளியீடு!!
பொது மருத்துவர் எம்.பி.பி.எஸ்., கல்வி தகுதியில் உள்ளவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 60 ஆயிரம் எனவும், முதுநிலை மருத்துவர் (நுரையீரல் நிபுணர்) அவர்களுக்கு அரசு தெரிவித்த ஊதியம் அடிப்படையில் 100 பேர் நியமிக்கப்பட உள்ளனர். டி.ஜி.என்.எம்., – நர்சிங் படிப்பு முடித்தவர்களுக்கு தொகுப்பூதியமாக 14 ஆயிரம் வழங்கப்படும். அந்த பணியிடங்களுக்கு 500 பேர் நியமிக்கப்பட உள்ளனர். 20 லேப் டெக்னீஷியன், ஐந்து எக்ஸ்ரே டெக்னீஷியன் பணியிடமும் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்ப ஈரோடு, திண்டலில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில், இன்று முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. கல்வி தகுதிச்சான்று, அடையாள அட்டை, மருத்துவ கவுன்சில் பதிவு சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 போன்றவற்றுடன் இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 77087 22659 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.