திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் சூப்பரான அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில் குறிப்பாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக நேரடியாக வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு!
நாள் ஒன்றுக்கு 10000 தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் திருப்பதிக்கு வருகை புரியும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அத்துடன் இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்கிவருகிறது. இதனை தொடர்ந்து ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அனுமதி வழங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதன்படி சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதன பாதபத்ம ஆராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் கலந்து கொள்ள வருகிற 1ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னணு சூலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அத்துடன் இதனை ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஏசி1ல் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டு பெறும் பக்தர்களுக்கு அடுத்த நாள் காலை வரை அங்க பிரதட்சணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.