திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை புரிகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் இலவச நேரடி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 வரை கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
அதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். இதையடுத்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. மேலும் கடந்த வாரம் என்றும் இல்லாத அளவுக்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். அதனால் பக்தர்கள் சுமார் 48 மணி நேரமாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் தேவஸ்தானம் பக்தர்களை காத்திருக்க வைக்காமல் சுவாமி தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது வரை பக்தர்களின் எண்ணிக்கை குறையாததால் இம்மாத இறுதி வரை விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளது. மேலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்க உள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.