தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி? தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை!
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தீபாவளி பட்டாசு:
தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் உச்சத்தில் இருந்த காரணத்தால் தீவிர கட்டுப்பாடுகள் இருந்தது. இதனால் மக்கள் பண்டிகை நாட்களில் எப்போதும் போல் இல்லாமல் வீட்டிற்கு உள்ளாகவே கழிக்க வேண்டிய சூழல் இருந்தது.
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு – சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை!
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கல்வி நிலையங்களில் நேரடி வகுப்புகள் தொடக்கம், திரையரங்குகளை திறப்பது, சுற்றுலா தலங்களில் அனுமதி, போக்குவரத்து கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு தளர்வுகளை அரசு சமீபத்தில் அளித்தது. இறுதியாக மத வழிபாட்டு தலங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அடைக்க வேண்டும் என்று இருந்தவையும் நீக்கப்பட்டு, அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு திட்டம்!
இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய பண்டிகையான தீபாவளி வருவதை ஒட்டி, பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் தற்போது தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி கரன் சின்கா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாலும், பண்டிகையை கருதியும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.