தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு – சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை!
தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 8 லிருந்து 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட தயாராகி வரும் நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகளை செயல்படுத்துவது குறித்து பள்ளிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதியன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் முறையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் பள்ளிகளை திறப்பதற்கான மாநில அரசின் உத்தரவின்படி சுழற்சி முறையில் வகுப்புகளை செயல்படுத்துவது குறித்து பள்ளிகள் ஆலோசித்து வருகின்றன. இதுவரை 9ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்று வந்தது.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு திட்டம்!
இப்போது அதிக வலிமையுடன் பள்ளிகளை திறப்பது ஒரு சவாலாக கருதப்படுகிறது. அதாவது, ‘தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் நடத்தப்பட்ட போது அதிகமான பிரச்சனைகள் எழவில்லை. சிறிது நாட்களிலேயே சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தப் பழகிவிட்டோம். ஆனால் இப்போது, அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறப்பது ஒரு சவாலாக இருக்கும். அதுவும் ஒரு கட்டமாக மட்டுமே வகுப்புகளை நடத்த முடியும் என்பதால் அதிக பலம் கொண்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு இது முக்கியமாக பிரச்சனையாக இருக்கும்’ என்று ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பள்ளிகளில் ஒரு சில வகுப்புகளுக்கு மைதானத்தை பயன்படுத்துவதையும், மழை இல்லாத நேரத்தில் வகுப்புகளை வெளியில் வைத்து நடத்துவதும் செயல்படுத்தப்பட்டது. இப்போது ‘பள்ளி வளாகத்தில் அதிக மாணவர்கள் இருப்பதால் பெரும்பாலான பள்ளிகள் மாற்று நாட்களில் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும். ஒரு சில வகுப்புகளை ஒரு நாளும் மற்ற வகுப்புகளை அடுத்த நாளும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும்’ என்று தனியார் பள்ளிகளின் நிருபர் கூட்டமைப்பின் தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கான வட்டி தள்ளுபடி – பொதுமக்கள் கோரிக்கை!
இப்போது ‘பள்ளிகள் சில வகுப்புகளுக்கு அரை நாள் மற்றும் சில வகுப்புகளுக்கு முழு நாளும் வகுப்புகளை நடத்தினால் வேலை செய்யும் பெற்றோருக்கு மிகவும் கடினமாக இருக்கும். குறைந்தபட்சம் மாற்று நாட்களில் நாள் முழுவதும் வகுப்புகள் நடத்தப்பட்டால் அது நன்றாக இருக்கும்’ என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சமூக இடைவெளியை எவ்வளவு தூரம் சரியாக பராமரிப்பார்கள் என்ற கவலையும் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.