1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு திட்டம்!

0
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி பள்ளிகள் திறப்பு - அரசு திட்டம்!
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி பள்ளிகள் திறப்பு - அரசு திட்டம்!
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு திட்டம்!

புதுச்சேரி மாநில அரசு தமிழக அரசை பின்பற்றி வரும் நவ.8 ம் தேதி முதல் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான தீவிரமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நிலவி வருகிறது. அதனால் புதுச்சேரி மாநிலம் தமிழகத்தை பின்பற்றி அனைத்து விதமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தமிழகத்தை பின்பற்றியே 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்.1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பின்னர் மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பேலன்ஸ் தொகையை சரிபார்க்க எளிய வழிமுறைகள்!

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் நவ.1 ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த பள்ளிகள் திறக்கும் முடிவானது மருத்துவ குழுவுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி அரசு தொடக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கான வட்டி தள்ளுபடி – பொதுமக்கள் கோரிக்கை!

பள்ளிகள் திறக்கும் தேதி கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார். அதன்படி இன்று புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளிகள் நவ.8-ம் தேதி திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் வரும் நவ.8 ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஏனெனில் நவ.1 ம் தேதி விடுதலை நாள், 2-ம் தேதி கல்லறை நினைவு நாள், 4-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதனால் நவ.8-ம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!