விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை திடீர் மாற்றம் – ரசிகர்கள் வருத்தம்!
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி, இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அம்மாவாக நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காற்றுக்கென்ன வேலி:
விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், கல்வியை மையப்படுத்தி கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள காற்றுக்கென்ன வேலி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்துள்ளது. எப்படியாவது படித்து விட வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடக்கத்தில் புதுமுக நடிகர் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தப்பட்டனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து சனிக்கிழமையுடன் விலகிய ரோஷினி – ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
கல்லூரி படிக்கும் காலத்திலேயே அப்பா திருமணம் ஏற்பாடு செய்ததால் வீட்டில் இருந்து ஓடி வரும் ஹீரோயின் நிலா சென்னை வந்து அக்கா வீட்டில் தங்கி இங்கேயே ஒரு கல்லூரியில் சேர்கிறார். வீட்டில் அக்கா கணவரின் சில்மிஷம், கல்லூரி ஆசிரியர் சூர்யா உடன் காதல் அதனால் வரும் பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் வந்தாலும் நிலா அதை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை. சமீபத்திய எபிசோடுகளில் கல்லூரி பிரச்சனைக்காக நிலாவை ஆள் வைத்து அடித்தது யார் என்கிற பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து சனிக்கிழமையுடன் விலகிய ரோஷினி – ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
இந்நிலையில் அந்த சீரியல் ஹீரோவாக நடிக்கும் பிரபல நடிகர் தர்ஷன் கே ராஜு சீரியலை விட்டு விலக இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து அம்மா கதாபாத்திரமும் மாற்றப்பட இருப்பதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொடர்ந்து சீரியல் நடிகர்கள் மாற்றப்படுவதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.