‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து சனிக்கிழமையுடன் விலகிய ரோஷினி – ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி சீரியலில் இருந்து விலக உண்மையான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு தான். இந்நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலக இருப்பதாக செய்திகள் வெளியானது. நேற்று முன் தினம், அதாவது அக்டோபர் 23 சனிக்கிழமை ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர் அன்றுடன் விடை பெறுவதாக சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாராம்.
கோபியை விவாகரத்து செய்யும் பாக்கியா? வேறொருவருடன் திருமணம்? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ட்விஸ்ட்!
மாடலிங் துறையில் இருந்து சீரியலுக்கு வந்த ரோஷினி முதன் முதலில் பாரதி கண்ணம்மாவில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். அந்த சீரியல் தற்போது மாபெரும் வெற்றியுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலக பல காரணங்கள் வெளிவந்தன. சீரியலில் பிரபலமாக இருப்பதால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததாகவும், அதனால் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாக அதனால் தான் சீரியலில் இருந்து வெளியேறுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து வருவதால் சினிமாவில் வாய்ப்புகள் வர பாதிப்பு ஏற்படலாம். ஹீரோயினாகவோ அல்லது செகண்ட் ஹீரோயினாகவோ கூட வாய்ப்புகள் வரும் பட்சத்தில் அம்மாவாக நடித்த சீரியல், ரசிகர்கள் மனசுல வந்து நிக்குமே எனச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ரோஷினி சிறிது நாட்களாக குழப்பத்தில் இருந்ததால் தற்போது சீரியலில் இருந்து விலக இருப்பதாக முக்கிய முடிவை எடுத்துள்ளனர். ஆனால் இது குறித்து அவரிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா கர்ப்பமாக இருப்பதால் அவரும் சீரியலில் இருந்து விலகுவாரா என்ற குழப்பம் இருந்தது. இந்தச் சூழலில் ஹீரோயினும் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பது ’பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.