ரயில் பயணிகளுக்கு ஷாக் – டிக்கெட் விலை ரூ.10 அதிகரிப்பு! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

0
ரயில் பயணிகளுக்கு ஷாக் - டிக்கெட் விலை ரூ.10 அதிகரிப்பு! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு ஷாக் - டிக்கெட் விலை ரூ.10 அதிகரிப்பு! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு ஷாக் – டிக்கெட் விலை ரூ.10 அதிகரிப்பு! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிக்கான கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ரயில் பயணிகளின் டிக்கெட்டுகள் விலை உயரும். இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு:

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. அப்போது ரயில் டிக்கெட்கள் விலை சற்று உயர்த்தப்பட்டது. இந்த வகையில் தற்போது நாடு முழுவதும் 50க்கு மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மேம்பாட்டு பணிகள் தனியார் மற்றும் பொது பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் நிலையங்களின் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிக்கு கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அஞ்சலகத்தின் புதிய சேவை தொடக்கம்!

இதனால் ரயில்வே பயணிகளின் டிக்கெட் விலை உயரும் என்ன நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வகையில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பவர்களின் டிக்கெட் கட்டணத்துடன் தலா 10 ரூபாய் மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகளில் 2 கிளாஸ் மற்றும் படுக்கை வசதி பயணிகளிடம், முதல் வகுப்பு பயணிகளிடமும் கட்டணத்துடன் 25 ரூபாய் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது இந்த கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த வகையில் குளிர்சாதன வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து போக்குவரத்துக்கு தடை? ஷாக் ரிப்போர்ட்!

இதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும். மற்றும் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் என்றால் மேம்பாட்டு நிதியாக பாதி கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வகையில் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட் வசதியைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு ரயில் நிலைய மேம்பாட்டு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணி புறப்படும் இடமும் இறங்கும் இடமும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் என்றால் 1.5 மடங்கு கட்டணம் ஆகும். இந்த கூடுதல் கட்டணம் குறித்த அறிவிப்பு சமூகவலைத்தளத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!