அரசு ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அஞ்சலகத்தின் புதிய சேவை தொடக்கம்!
தமிழகத்தில் மாதந்தோறும் பென்ஷன் வழங்கப்படும் அரசு ஓய்வூதியர்களுக்கு புதிய சேவையை அஞ்சல் துறை அறிமுகம் செய்து வைத்து உள்ளது. இச்சேவை குறித்து முழு விவரங்களை காண்போம்.
அஞ்சல் துறையின் சேவை:
ஓய்வூதியர்கள் மாதந்தோறும் வாங்கும் பென்ஷன் பணத்தை வங்கிகள் வாயிலாகவும், இணையதளத்தில் பதிவு செய்தும், அஞ்சல் துறை மூலமாகவும் பெற்று வருகிறார்கள். இந்த பென்ஷன் பணம் வாங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழை வங்கி மூலம் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படும் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே ஓய்வூதியர்களுக்கு பென்சன் பணம் வழங்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து பல்கலை தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!
தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மூத்த குடி ஓய்வூதியர்கள் வங்கிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வதில் சிரமம் ஏற்படுவதால் இனி வீடுகளுக்கே சென்று மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவையை இந்தியா போஸ்ட் வங்கி மூலம் அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. இந்த சேவை அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து போக்குவரத்துக்கு தடை? ஷாக் ரிப்போர்ட்!
இச்சேவை குறித்து சென்னை நகர வடக்கு மண்டல அஞ்சலகங்களின் முதுநிலை மேற்பார்வையாளர் பேட்டியளித்தார். அதில் அஞ்சல் தகவல் மையம் அல்லது இணையதளத்தில் மூலம் வீடு தேடி சான்றிதழ் வழங்கும் சேவைக்கான வேண்டுகோளை பதிவு செய்யலாம் என்று கூறினார். மேலும் மின்னணு சான்றிதழுக்கு http://jeevanpramaan.gov.in/ppouser/login என்ற இணையதள வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த இணையதள இணைப்பு மூலம் உரிய படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.