பிரபல காமெடி நடிகர் சூரி வீட்டு நிகழ்ச்சியில் நகை திருட்டு – போலீஸ் விசாரணையில் ஒருவர் கைது!
மதுரையில் பிரபல சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக அளிக்கப்பட்ட புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகை திருட்டு:
மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த 9 ஆம் தேதி சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயனும் இதில் கலந்து கொண்டார். அப்போது ஏதோ ஒரு மர்ம நபர், மணமகன் அறையில் நுழைந்து அங்கிருந்த 5 பவுன் கவர்னர் மாலை, 3 பவுன் தங்க நெக்லஸ், 2 பவுன் பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.
Zomato இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீர் பதவி விலகல் – நிறுவனம் அறிவிப்பு!
இது தொடர்பாக திருமண மண்டப மேலாளர் சூரியபிரகாஷ் (வயது 47) என்பவர் கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து, திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழாவில் திருட்டு போனதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் – முதல்வர் அறிவிப்பு!
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், காணாமல் போன 10 சவரன் நகையை மீட்டுள்ளதோடு, விக்னேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர். தற்போது நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.