தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் – முதல்வர் அறிவிப்பு!

0
தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்வர் அறிவிப்பு!
தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்வர் அறிவிப்பு!
தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து பதக்கங்கள் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கான பதக்கங்கள் பெற உள்ளவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பேரறிஞர் அண்ணா:

தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல் ரேகை பதிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பாராட்டும் வகையிலும் அவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறாதோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

எனவே இந்த ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, தீயணைப்பு வீரர்கள் முதல் மாவட்ட அலுவலர் நிலையில் வகையிலான வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர், முதல்நிலை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் உதவிப் படை தளபதி முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர் காவல் படை அலுவலர்களுக்கும், விரல் ரேகை பிரிவில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோருக்கும் அவர்களின் மெச்சத் தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைபிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு!

கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அன்று மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்திலிருந்து பல மனித உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்றிய நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலத்த காயங்களுடன் தங்கள் உயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் உட்பட 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்களுக்கு தமிழக முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் மற்றும் 5 லட்சம் பண வெகுமதி வழங்கப்படுகிறது. இந்த பதக்கங்கள் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!