இன்று முதல் பிப்.25 வரை மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதால், மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி இருக்கிறது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இன்று (பிப்.21) முதல் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வருவதால், குஜராத் அரசு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இன்று (பிப்.21) முதல் நேரடி முறையில் மட்டுமே வகுப்புகளை துவங்க உள்ளது. இப்போது குஜராத்தில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5,000க்கும் அதிகமாக இருப்பதால், அகமதாபாத் மற்றும் வதோதரா மாவட்டங்களில் மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக பிப்ரவரி 17 முதல், குஜராத் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள், முன்பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்க அரசு முடிவு செய்தது. தொடர்ந்து பிப்ரவரி 21 முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் கொரோனா தொடர்பான முறையான நோய் தடுப்பு வழிகாட்டுதல்களையும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்றி நேரடி வகுப்புகளை தொடங்கவும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவுறுத்தி இருந்தார்.
மீண்டும் கண்ணம்மாவாக ரீஎன்ட்ரி கொடுத்த “பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ப்ரோமோ ரிலீஸ்!
தவிர கடந்த வாரம் வரை, அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், காந்திநகர், ஜாம்நகர், பாவ்நகர் மற்றும் ஜூனாகத் ஆகிய மாநகராட்சிகளில் தினந்தோறும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை அரசு தற்போது நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் திறந்தவெளியில் 75% திறனுடனும், மூடப்பட்ட இடங்களில் 50% திறனுடனும் ஆடிட்டோரியம், திருமண விழாக்கள், மத மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொள்ள குஜராத் அரசு அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.