மருந்து வாங்க பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, மனம் வருந்தும் படி பேசிய கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
மருந்து வாங்க பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, மனம் வருந்தும் படி பேசிய கோபி - இன்றைய
மருந்து வாங்க பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, மனம் வருந்தும் படி பேசிய கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
மருந்து வாங்க பணம் இல்லாமல் இருக்கும் பாக்கியா, மனம் வருந்தும் படி பேசிய கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவிடம் ஈஸ்வரி மருந்து தீர்ந்துவிட்டதாக சொல்கிறார். பின் மருந்து கடையில் எல்லாம் வாங்கிவிட்டு பணம் இல்லாமல் பாக்கியா இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிடம் ஜெனி உங்க தொழில் எப்படி போகிறது நான் சரியாக உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என சொல்கிறார். அப்போது பாக்கியா நீ வீட்டை பார்த்துக் கொண்டால் தான் நான் வேலை செய்ய முடியும் என சொல்கிறார். அப்போது ஈஸ்வரி வர, அவர் பாக்கியாவிடம் மருந்து சீட்டை கொடுத்து வாங்கி கொண்டு வருகிறார். அப்போது இப்போ தான மருந்து வாங்கினோம் அதற்குள் காலியாகிவிட்டதா என கேட்க ஜெனி அன்னைக்கு ஸ்கேன் பண்ண போது கொடுத்த மருந்தும் இதுவும் வேற வேற என சொல்கிறார்.

புது கடை சந்தோஷத்தில் பார்ட்டி கொடுத்த மூர்த்தி, புரோட்டா வாங்கி சாப்பிட நினைத்த பெண்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் ஈஸ்வரி எனக்கு சுகர் மாத்திரை, கால் வலி மருந்து, தலைவலி மருந்து, குளிக்க சோப்பு என எல்லாம் வாங்கி கொண்டு வந்துரு என சொல்கிறார். பாக்கியா மருந்து கடைக்கு சென்று இதெல்லாம் கொடுக்க சொல்ல, 3500 ரூபாய் ஆவதாக சொல்கிறார். ஆனால் பாக்கியாவிடம் அவ்வளவு பணம் இல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த மருந்தை எடுத்து வைத்துவிட்டு நான் வீட்டில் சென்று பணம் எடுப்பதாக பாக்கியா சொல்கிறார். வீட்டில் ஈஸ்வரி இருக்க, அவருக்கு தெரியாமல் சென்று பணத்தை எடுக்கிறார்.

அதை கொண்டு சென்று கடையில் கொடுத்து மருந்து வாங்கி வருகிறார். பின் பாக்கியா செலவிற்கு பணம் இல்லாமல் இருந்ததால் கோபியிடம் வந்து பேசுகிறார். கோபியிடம் இந்த 2 மாதங்களுக்கு மட்டும் பணம் அதிகமாக வேண்டும் என கேட்கிறார். அப்போது கோபி சரி என சொல்ல, மருந்து செலவிற்கு அதிகமாக பணம் தேவைப்படுவதாக சொல்கிறார். பின் கோபி பணத்தை தவிர என்னிடம் பேச எதுவும் இல்லையா என கேட்கிறார். அப்போது பாக்கியா காலையில் எழுந்தது முதல் மாமா சரியாகிவிடமாட்டாரா என நினைக்கிறேன்.

ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல போகும் கண்ணம்மா, ஆசையாக காத்திருக்கும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

இந்த வீட்டை பற்றி தான் என்னுடைய முழு எண்ணமும் இருக்கிறது என பாக்கியா சொல்கிறார். பின் கோபி நீ இந்த ரூமிற்குள் வந்தாலே பணம் கேட்பதையோ வழக்கமாக வைத்திருக்கிறாய் அதனால் எனக்கு பயமாக இருக்கிறது என கோபி சொல்கிறார். பின் பாக்கியா கோபி சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். வீட்டில் எல்லாரும் தூங்கியபின் அவர் லட்டு செய்து கொண்டிருக்க தட்டு கீழே விழுந்துவிடுகிறது. அப்போது எழில் வந்து பார்க்க உன்னால் முடியாத ஆர்டர் ஏன் எடுக்கிறாய் என கேட்கிறார். இப்போது எல்லாம் முடிந்துவிடும் என பாக்கியா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!