நாளை முதல் ஏப்.26 வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் திடீர் உத்தரவு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. இந்த வைரசின் பிறப்பிடமான சீனா இன்னும் இந்த தொற்றின் வீரியத்தை அனுபவித்து வருகிறது..இதற்கிடையே, சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஷாங்காய் நகரில் நோய் பரவல் உச்சம் தொடுவதால் அமலில் உள்ள ஊரடங்கை, வரும் 26 ஆம் தேதி வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய நம் அண்டை நாடான சீனாவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதர நாடுகளில் அதன் பரவல் வேகமெடுத்தபோதும், அங்கு குறைவான மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சீனாவில் கடந்த பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து கொரோனா தொற்று பரவத் தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலால் பெரிதாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது ஆட்டிப்படைத்து வருகிறது. சீன அரசு ஜீரோ கோவிட் பாலிசியை கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் சீனாவின் மிகப்பெரிய பொருளாதார நகரமாக கருதப்படும் ஷாங்காயில் சுமார் இரண்டரை கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்த நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஷாங்காய் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில், 17,629 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது, நேற்று பதிவாகிய தினசரி பாதிப்பை விட 4.7 சதவீதம் குறைவு ஆகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் DA உயர்வு இருக்காது? AICPI தரவு சொல்வது இதுதான்!
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்து உள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து மீண்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ள அந்நகர நிர்வாகம், கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை உருவாகும் வரை இதே நிலை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் ஷாங்காய் நகர நிர்வாகம் கூறியுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில், பகுதி பகுதியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தேசிய சுகாதார ஆணைய அறிக்கையின்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 30,813 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்