லட்சுமிக்காக பாரதி எடுக்கப் போகும் முக்கிய முடிவு – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இத்தனை நாட்களாக மூடி வைத்திருந்த ரகசியத்தை அறிந்து கொண்ட லட்சுமி இனி தன் அம்மா, அப்பாவை சேர்த்து வைக்க எந்த மாதிரியான திட்டத்தில் ஈடுபடப் போகிறார் என்பதை காணும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
பாரதி கண்ணம்மா
சமீப காலமாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அப்பா, மகள் பாசப்போராட்டத்திற்கு ஒரு முடிவு சீக்கிரமே கிடைக்க இருக்கிறதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு குழந்தையின் 10 வருட தேடல்களுக்கு இப்போது தான் முடிவு கிடைத்திருக்கிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கடந்த எபிசோடுகளில் லட்சுமி தனது அப்பா பாரதி என்ற உண்மையை அறிந்து கொள்கிறார். இதனை கண்ணம்மாவிடம் இருந்து மறைக்கும் லட்சுமி சௌந்தர்யா, பாரதி என அனைவரிடமும் சற்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.
TN Job “FB Group” Join Now
இதுவரை நானும், என் அம்மாவும் தானே தனியாக இருந்தோம். இனிமேலும் அப்படியே இருந்து விடுகிறோம். நீங்கள் வேறு யாரோ தானே என்று சௌந்தர்யாவிடம் பேசும் லட்சுமி, பாரதியை அப்பா என்று கூப்பிட்டு, சாப்பாடு ஊட்டி விட சொல்லி மகிழ்ச்சியாகிறார். இது தவிர பாரதி, கண்ணம்மா இருவரும் எதற்காக பிரிந்தார்கள் என்று ஆராயத் துவங்கி இருக்கிறார் லட்சுமி. மறுபக்கத்தில் கண்ணம்மா மீது அத்தனை வெறுப்பு காட்டும் பாரதி, லட்சுமியிடம் அன்பாக நடந்து கொள்கிறார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதனால் இனி லட்சுமி மற்றும் ஹேமா மூலமாக தான் பாரதிக்கு மனமாற்றம் ஏற்படும் என்பது போல அடுத்த கட்ட கதைக்களம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இனி லட்சுமி மற்றும் ஹேமாவை வைத்து தான் மொத்த கதையும் இருக்கலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே ஹேமா பேசியது போல, இப்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் திட்டத்தில் லட்சுமியும் இணைந்து கொள்கிறார். தொடர்ந்து இந்த குழந்தைகள் எப்படி அப்பா, அம்மாவை சேர்த்து வைக்கப்போகிறார்கள் என்பது தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கதைக்களமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.