சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இன்றைய தங்கத்தின் விலை நிலவரத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை உயர்வு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக சாதாரண மக்கள் பல்வேறு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர். தங்கள் பணத்தை அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே 1 மாதத்தை கடந்தும் போர் நிலவி வருவதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
தங்கத்தின் மீது பெரும்பாலோனோர் அதிகளவு முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டினர்கள் கூட தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தது. இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,648க்கு விற்பனை செய்யப்பட்டது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா யார் தெரியுமா? – வைரலாகும் பதிவு!
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 38,832க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.31 உயர்ந்து ரூ.4,854க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நகைப்பிரியர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார்கள். இதே போல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.73.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.7380க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நிலவி வருவதால் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.