கோபியின் காதலி யார் என்பதை கண்டுபிடிக்க முயலும் பாக்கியா – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

0
கோபியின் காதலி யார் என்பதை கண்டுபிடிக்க முயலும் பாக்கியா - சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
கோபியின் காதலி யார் என்பதை கண்டுபிடிக்க முயலும் பாக்கியா - சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
கோபியின் காதலி யார் என்பதை கண்டுபிடிக்க முயலும் பாக்கியா – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியாவிற்கு எப்போது தான் கோபியின் மீது சந்தேகம் வரும் என எதிர்பார்த்த சமயத்தில் கோபியின் மீது பாக்கியா சந்தேகப்பட்டு கோபியை பின் தொடர்ந்து செல்வது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போது தான் பாக்கியாவிற்கு கோபியை பற்றிய உண்மைகள் தெரிய வர போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவின் கண் முன்னால் கோபி தவறு செய்தாலும் கூட கோபியின் மீது பாக்கியா அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். பாக்கியாவின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலும் மேலும் கோபி தவறு செய்து கொண்டிருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ராதிகாவும் கோபியின் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால், பாக்கியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என பயந்து யாரிடமும் சொல்லாமல் மறைத்து கோபியை தண்டித்து மட்டும் விட்டுவிடுகிறார். ஆனாலும் கோபி அடங்குவதாக இல்லை. மேலும் மேலும் ராதிகா பின்னாடி சுற்றிக் கொண்டிருந்த காரணத்தினால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என நினைத்து பாக்கியாவும் கோபியும் ஒன்றாக இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்.

இனி காலை 6 மணி முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

ஆனால் ராமமூர்த்தி தாத்தா ராதிகாவின் வீட்டிற்கு செல்வதற்குள் ராதிகா வீட்டை காலி செய்து வேறு ஒரு வீட்டிற்கு சென்று விடுகிறார். எப்படியாவது ராதிகாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறி விட வேண்டுமென தாத்தா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடு இரவில் கோபிக்கு ஒரு போன் வருகிறது. அதாவது ராதிகாதான் கோபிக்கு போன் செய்கிறார். இந்த நேரத்தில் யார் கோபிக்கு போன் செய்வார்கள் என பாக்கியாவிற்கு சந்தேகம் எழுகிறது. அந்த போன் கால் வந்ததும் கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். இந்த நேரத்தில் எங்கே செல்கிறார் என கோபியை பாக்கியா பின் தொடர்கிறார். அப்போது வண்டியில் இருந்து பாக்கியா கீழே விழுந்து அடிபடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!