ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்துவிட்ட தனம் – பாக்கியாவிடம் கூறுவாரா? வெளியான அதிரடி ப்ரோமோ!
பாக்கியாவின் வீட்டிற்கு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருகிறார்கள். அப்போது ராதிகாவுடன் கோபி நெருக்கமாக கோவிலுக்கு செல்வதை தனம் பார்த்து அதிர்ச்சியடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராதிகாவை கோபி காதலித்து கொண்டிருக்கிறார், தன்னை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்கிற விஷயம் பாக்கியாவிற்கு எப்போது தான் தெரியவரப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாக்கியாவின் கண்ணுக்கு முன்னால் தவறு செய்தும் கூட பாக்கியவால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. பாக்கியாவை தவிர அனைவருக்குமே கோபி ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறார் என்கிற சந்தேகம் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
பாக்கியாவும் ராதிகாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் எப்படியும் தன்னைப்பற்றிய உண்மைகள் இருவருக்கும் தெரிய வந்து மிக பெரிய பிரச்னையாகிவிடும் என பயந்து இருவரையும் பிரிக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டில் நஞ்சை கலந்துவைத்து பாக்கியாவை கோபி ஜெயிலுக்கு அனுப்பினார். பின்பு, எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து காவல் நிலையத்திலிருந்து பாக்கியா =வை வெளியே கூட்டி வருகிறார். ஆரம்பத்தில் பாக்கியாவை நம்பியதிற்கு அவர் தன்னை ஏமாற்றி காவல் நிலையம் வரைக்கும் அழைத்துவந்துவிட்டார் என கோவமாக இருந்தார்.
அனைத்து உண்மைகளையும் தெரிந்த பிறகு மீண்டும் பாக்கியாவிடம் பழையபடி பேச ஆரம்பித்துவிட்டார். போட்ட அனைத்து பிளானும் வீணாகிவிட்டதே என கோபி வருத்தத்தில் இருக்கிறார். தற்போது பாக்கியாவின் வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருகிறார்கள். அனைவரையும் பாக்கியா தான் விழுந்து விழுந்து கவனிக்கிறார். தற்போது ராதிகா, மயூவை கூட்டி கொண்டு கோபி கோவிலுக்கு செல்கிறார். அதே கோவிலுக்கு தான் தனமும் வருகிறார். அப்போது ராதிகாவுடன் கோபி நெருக்கமாக இருப்பதை தனம் பார்த்துவிடுகிறார். எதற்காக ராதிகாவுடன் கோபி கோவிலுக்கு வர வேண்டும் என தனம் யோசிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.