போலீசிடம் மாட்டிக் கொண்ட கண்ணன் ஐஸ்வர்யா, காப்பாற்ற வந்த ஜீவா மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் இரவு வெளியே ஊர் சுற்ற கிளம்ப அப்போது போலீசில் மாட்டிக் கொள்கின்றனர். அப்போது போலீஸ் வீட்டிற்கு வர கண்ணன் ஜீவாவை அழைக்கிறார். அப்போது மீனாவும் வர போலீசை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதைக்களம் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதால் வாரம் வாரம் ஒரு ஜோடியை வைத்து கதை கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரங்களில் முல்லை கதிரை பற்றியே காட்டப்பட்டது. முல்லைக்கு டிரீட்மென்ட் மூலமாக குழந்தை பிறக்க ஏற்பாடு செய்ய அதனால் கதிர் முல்லையை அக்கறையுடன் கவனித்து கொள்வது எல்லாம் பார்க்கவே அழகாக இருந்தது.
நடிகை VJ சித்ரா தற்கொலைக்கு முன் இதைதான் செய்தாரா? மனம் திறந்த கணவர் ஹேம்நாத்!
இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் கண்ணன் ஐஸ்வர்யாவை பற்றியே கதை நகர்கிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் முதன்முறையாக இரவு வெளியே செல்ல அப்போது ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஐஸ்வர்யா ஆசைப்படுகிறார். அதனால் கண்ணன் ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுக்க அதை சாப்பிட்ட பின் தான் பணம் கொண்டு வரவில்லை என கண்ணன் நினைக்கிறார். அதனால் ஜீவாவின் உதவியை கேட்க அவர் வந்து பணம் கொடுத்து உதவி செய்கிறார்.
Exams Daily Mobile App Download
இப்படி ஒரு முறை மாட்டிக் கொண்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையும் இரவு வெளியே செல்கின்றனர் அங்கே போலீஸ் இருப்பதை பார்த்து கண்ணன் பயப்பட்டு ஓட போலீசார் அவர்களை பிடித்துவிடுகின்றனர். அப்போது நாங்கள் கணவன் மனைவி தான் என சொல்லியும் கேட்காமல் வீட்டிற்கு போலீஸ் வருகின்றனர். அப்போது வீட்டில் யாரையாவது வர சொல்லி என போலீசார் சொல்ல கண்ணன் மீண்டும் ஜீவாவின் உதவியை கேட்கிறார். அப்போது மீனாவுடன் ஜீவா வர வெளியே கண்ணன் போலீஸ் உடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கண்ணன் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதை பார்த்து வீட்டில் எதாவது பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.