அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அதிருப்தியில் பொதுமக்கள்!

0
அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அதிருப்தியில் பொதுமக்கள்!
அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அதிருப்தியில் பொதுமக்கள்!
அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அதிருப்தியில் பொதுமக்கள்!

முழு நகரமும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் அமல்படுத்தப்பட்டிருப்பதால் உணவுப் பற்றாக்குறை நிலவி வருவதாக சீனாவின் ஷாங்காய் நகர மக்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் அந்நகரத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு மாகாணங்கள் மற்றும் நகரங்களில் கடுமையான முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கிறது சீன அரசாங்கம். அந்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போதைய ஒமிக்ரான் பரவல் தொற்று தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் புதிய ஒமிக்ரான் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு சீனாவின் ஷாங்காய் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் ஷாங்காய் நகர மக்கள் கடந்த ஒரு வார லாக்டவுன் கட்டுப்பாடுகள் மீது தங்களது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது, அந்நகரத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் இருப்பது குறித்தும் ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர். ஆரம்பத்தில் ஷாங்காய் நகரம் முழுவதும் முழு ஊரடங்கை விதிப்பதை தவிர்ப்பதாக உறுதியளித்த அதிகாரிகள் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு, சீனாவின் நிதி மையமான ஷாங்காயை இரண்டாகப் பிரித்து முழு ஊரடங்கை அறிவித்தனர்.

இதனால், அதிகாரிகள் ஷாங்காய் நகரத்தின் 26 மில்லியன் குடியிருப்பாளர்களை சோதிக்க முடியும் என்று கருதினார்கள். இதற்கிடையில், சீனாவில் கடந்த மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 104,000 உள்நாட்டு கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், சமீபத்திய வழக்குகளில் 90% ஷாங்காய் அல்லது வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்புகளை கவனத்தில் கொண்டு ஷாங்காய் நகரத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை, பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

இதற்கிடையில் சீனாவின் புடாங் பகுதியில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நான்கு நாள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடங்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட புக்ஸி மண்டலத்தில், மக்கள் வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகள் நேற்று (ஏப்ரல்.1) முதல் தொடங்கவிருந்தன. ஆனால் அந்நகரத்தின் பல சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் திடீரென்று வீட்டை விற்று வெளியேற அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் புடாங் நகரத்தின் பெரும்பகுதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல நேற்று முதல் முழு ஊரடங்கிற்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!