தமிழகத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் – அரசு முக்கிய அறிவிப்பு! கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பரவல் தொற்று தீவிரமடைந்து வருவதால் மக்கள் மீண்டுமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முகக்கவசம் கட்டாயம்:
இந்தியாவில் கொரோனா 3ம் அலைபரவல் ஓய்ந்து வந்ததற்கு பிற்பாடு மக்கள் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்திருக்கும் இந்த சூழலில் இப்போது புதிய பாதிப்புகள் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் நாளொன்றுக்கு 10,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் மூன்று இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வந்த தினசரி புதிய பாதிப்புகள் இப்போது 1000ஐ நெருங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயமுத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நோய்த்தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், ஒவ்வொரு வாரம் ஞாயிற்று கிழமைகள் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பொது மக்கள் அனைவரும் மீண்டுமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – முக்கிய தகவல் வெளியீடு!
அதாவது, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் செலுத்தி வரும் அரசாங்கம் இப்போது முகக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்கி இருக்கிறது. மேலும், அரசின் அறிவுறுத்தலின்படி முகக்கவசங்களை அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதங்களை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் கொரோனா பாதிப்புகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அப்பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.