தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி:
இந்தியாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டனர். இந்த ரம்மி விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையில் மக்கள் தங்களிடம் உள்ளதை போட்டு ஏமாந்து விடுகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு ஜாய்னிங் போனஸ் என்று விளையாடுபவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுத்தனர். தற்போது இந்தத் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. அதனால் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு எப்போது? அரசு விளக்கம்!
தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள யூடியூப் சேனல்களில் ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்கள் அதிகளவில் வருகின்றன. இதில் சினிமா பிரபலங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவது போல் காண்பிகின்றனர். அதனால் பொதுமக்களும் இதனை விளையாட ஆர்வம் காண்பிகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு ஒரே ஒரு நிறுவனம்தான் இருந்தது. தற்போது விளையாட்டில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் பல நிறுவனங்கள் வந்து விட்டது. இந்த விளையாட்டில் பணத்தை செலவழித்தவர்கள் அதனை திரும்ப பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலுகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதனால் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. அப்போது இதற்கு எதிராக ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் இந்த தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் தமிழக அரசு இயற்றிய சட்டம், சட்டத்திற்கு விரோதமானது என்று கூறினார். இந்த நிலையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.