தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய முடிவுகள் – முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய முடிவுகள் - முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய முடிவுகள் - முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய முடிவுகள் – முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்து உள்ளது. இது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மே 10 முதல் அமலில் உள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. மேலும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

புது பிசினஸ் தொடங்க உள்ள பாக்கியா, முதல் வாடிக்கையாளராக சேர்ந்த ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அதுமட்டுமின்றி செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க உத்தேசிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். மறுபுறம் இன்று முதல் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் கண்டிப்பாக வருகை புரிய வேண்டும் என உயர்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ மாணவர்கள் தவிர பிற பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

இதனிடையே பள்ளிகள் திறப்பிற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது சில பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பிற்கான செயல்பாட்டு வழிமுறைகள் மற்றும் இறுதி முடிவு எடுப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்துகள் பெறப்பட உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!