‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கலாட்டாவுடன் தொடங்கும் திருமணம் – இந்த வார ப்ரோமோ!
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இந்த வாரம் தாலிக்கு பொன் உருக்கும் விழா தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், பரபரப்பான இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பொன் உருக்கும் விழா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தற்போது கார்த்தியின் திருமண ஏற்பாடுகள் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் தமிழும் சரஸ்வதியும் தங்களது காதலை தெரிவித்துக் கொண்டுள்ளனர். சரஸ்வதி தான் கோவிலில் தமிழிடம் பேசிய குரல் என்பதை தமிழ் அறிந்து கொள்கிறார். இன்னொரு புறம் பல்வேறு தடைகளையும் தாண்டி கார்த்தி மற்றும் வசுந்தராவின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
கோபிக்கு பண உதவி செய்யும் பாக்கியா, மனம் வருந்திய கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் தாலிக்கு பொன் உருக்கும் விழா நடத்துவதற்கு நேரம் குறித்து சந்திரகலா தமிழ் குடும்பத்திடம் சொல்லி இருக்கிறார். ஆனால் விழா அன்று குறித்த நேரத்தை விட முன்னதாக விழாவை நடத்த வேண்டும் என்று சந்திரகலா தமிழிடம் சொல்லி விடுகிறார். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் சொன்ன நேரத்திற்கு வருவதற்காக வீட்டில் கிளம்பி கொண்டிருக்கும் போது திடீரென்று சீக்கிரமாக வர சொல்கிறார்.
இதனால் தமிழ் மிகவும் டென்ஷனாகிறார். நீங்க தான வேற டைம் சொன்னீங்க இப்போ சீக்கிரமாக வாங்கன்னு சொன்ன எப்படி என்று கோவப்படுகிறார். தமிழின் அம்மாவிடம் வசுந்தரா போன் செய்து தாலிக்கு பொன் உருக்குற தங்கத்தை நீங்க தான் தொட்டு தரணும் அப்படினு சொல்லி வருத்தப்படுறாங்க. இந்த வாரத்திற்கான ப்ரோமோ இப்படி பரபரப்பாக வெளி வந்திருக்கிறது.