கோபிக்கு பண உதவி செய்யும் பாக்கியா, மனம் வருந்திய கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூல் பீஸ் கட்ட கூட பணம் இல்லாமல் கோபி இருக்க, பாக்கியா அவருக்கு உதவி செய்ய நினைக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி தனது நண்பரிடம் பணம் இருக்கிறதா என பேசியதை பாக்கியா கேட்டுவிடுகிறார். உடனே கோபியிடம் பாக்கியா வீட்டு செலவிற்கு பணம் வேண்டாம் என சொல்ல, ஏன் நான் பணம் கொடுக்கவில்லை என குத்தி காட்டி பேசுகிறாயா என கேட்கிறார். இல்ல நீங்க பணம் தேவை என போனில் பேசுனீங்க என பாக்கியா கேட்க, அதை நீ ஒட்டு கேட்டியா என கோபி கோவித்து கொள்கிறார். எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன் என கோபி சொல்கிறார்.
மறுநாள் கோபி அமர்ந்திருக்க, ஈஸ்வரி மற்றும் அவர் அப்பா ஏன் முகம் வாடி இருக்கிறது என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சொல்ல, இனியா இன்னைக்கு தான் கடைசி தேதி என சொல்கிறார். உடனே கோபி நான் கட்டிவிடுவேன் என சொல்ல, ஈஸ்வரி மருமகளுக்கு மட்டும் காசு வேண்டும் என்றால் தூக்கி கொடுத்துவிடுவீங்க இப்போ உங்க பையனுக்கு தரமாட்டீங்களா என கேட்க கோபி, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.
இனியா இன்னைக்கு காட்டாமல் இருந்தால் என்னை நிற்க வைத்து கேள்வி கேட்பார்கள் எனக்கு அசிங்கமாக இருக்கும் இன்னைக்கும் கட்டாமல் இருந்தால் நான் பேசவே மாட்டேன் என கோவித்து கொள்கிறார். உடனே கோபி நான் காட்டிவிடுகிறேன் என சொல்லி சமாதானம் செய்கிறார். அலுவலகத்தில் கோபி பணம் இல்லாமல் இருக்க, அதே நேரம் பார்த்து பாக்கியா வருகிறார். இனியா ஸ்கூலுக்கு போகவில்லையா என கேட்க, போகணும் என பாக்கியா சொல்கிறார். உடனே பாக்கியா கோபியிடம் பணம் கொடுத்து இதை கொண்டு சென்று இனியா ஸ்கூல் சேருங்க என சொல்கிறார்.
அதெல்லாம் வேண்டாம் என கோபி சொல்ல, குடும்பத்தில் உன் பணம் என் பணம் என எதுவும் இல்லை இது நம்ம பணம் என பாக்கியா சொல்கிறார். உடனே கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை நினைத்து பார்க்கிறார். இத்தனை நாள் நீங்க தனியா தான எல்லாம் பார்த்தீங்க நான் எதுவும் செய்ததே இல்லை. இப்போ என்னிடம் பணம் இருக்கிறது. ஒரு வீடு என்றால் நம்ம இருவரும் தான, அதுவும் இந்த பணம் என்னிடம் சும்மா தான் இருக்கும் என பாக்கியா பணம் கொடுக்கிறார்.
உடனே கோபி பணத்தை வாங்கி கொள்ள, பாக்கியாவை புரிந்து கொள்ளாமல் இருந்தோம் என நினைத்து வருத்தப்படுகிறார். பின் ஜெனி ரூமில் நடந்துக் கொண்டிருக்க,செழியன் ஏன் இப்படி நடக்கிற என கேட்கிறார். பாப்பா வயிற்றுக்குள்ளே இருப்பது ரொம்ப நல்லா இருக்கு என ஜெனி சொல்ல, செழியன் வீட்டில் நடந்த பிரச்சனையால் பாப்பாவை வளர விட்டிருக்கோம் என சொல்கிறார். உடனே ஜெனி இதை பற்றி என்னிடம் பேசாதே என சொல்கிறார். உடனே ஜெனி உனக்கு மனசாட்சியே இல்லையா என கேட்டு சண்டை போடுகிறார்.
அந்த நேரம் பார்த்து பாக்கியா அங்கே வர இருவருக்குள்ளே சண்டை நடக்கிறது என கோபியிடம் சொல்கிறார். உடனே புருஷன் பொண்டாட்டி இடையே அடிக்கடி எதாவது நடக்கும் நீ அடுத்தவங்களை கவனிப்பது போல உன்னையும் கவனித்து கொள்ள வேண்டும் என கோபி சொல்ல பாக்கியா சந்தோசமாக இருக்கிறார். ஜெனி தூங்கி கொண்டிருக்க வயிறு வலிப்பது போல இருக்க அவர் பாத்ரூம் செல்கிறார். அப்போது ரத்தமாக போவதை பார்த்து ஜெனி பாக்கியாவை அழைக்கிறார். நடந்ததை அழுது கொண்டே செல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.