தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஏராளமானோர் ஆசிரியர் பணி கிடைக்காமல் உள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு:

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழக பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டது.. இதற்காக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கடந்த 1-ந் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மாதாந்திர மதிப்பூதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த தற்காலிக ஆசிரியர் பணியிட நியமனங்களில், சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கில், பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதற்கு இணங்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் நியமனத்தில் திருத்தம் செய்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

Freshers பட்டதாரிகளுக்கு 3 லட்சம் ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்!

இருப்பினும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றத் தடை இருப்பதால், அதை விலக்க வேண்டும் என்று வழக்கின் இன்றைய விசாரணையில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும்? அதில் என்ன அவசரம் இருக்கிறது? பதிலாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே? என்று கூறி ஏற்கனவே பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி கூறினார்.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. மேலும் வழக்கில் உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற வழிகாட்டுதல் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!