தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மத வழிபாட்டு தலங்கள் மூடல் – பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மத வழிபாட்டு தலங்கள் மூடல் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மத வழிபாட்டு தலங்கள் மூடல் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மத வழிபாட்டு தலங்கள் மூடல் – பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணியாக கூட்டத்தை குறைக்கும் நடவடிக்கையாக ஜனவரி 14ம் தேதி முதல் 18 ம் தேதி வரை வழிபாட்டு தலங்களுக்கு பொது மக்கள் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

வழிபாட்டு தலங்கள் மூடல்:

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் மருத்துவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் அதிகம் வெளி இடங்களுக்கு செல்லும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பயோமெட்ரிக் முறை! பொதுமக்கள் அச்சம்!

அன்றைய தினம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், காய்கறி. மளிகை, மருந்து கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50% பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டு தலங்களுக்கு மூடப்பட்டு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு பணியில் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 15 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் தீவிரமடையும் கொரோனா – ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இதுவரை 15 முதல் 18 வயதுள்ள 22.50 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடாத வகையில் ஜனவரி 14ம் தேதி முதல் 18 ம் தேதி வரை வழிபாட்டு தலங்களுக்கு பொது மக்கள் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பக்தர்கள் நேரில் சென்று வழிபட அனுமதி இல்லை.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!