தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பயோமெட்ரிக் முறை! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் பொங்கல் தினவிழாவை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் முறை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, நெய் மற்றும் முழு கரும்பும் சேர்த்து 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனை ரேஷன் கடைகளில் இருந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பெற்று கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு பயோமெட்ரிக் முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பயோமெட்ரிக் முறையில் பெறுவது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் தாமதமின்றி பொருட்களை பெற்று செல்ல முடிந்தது. நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்னும் ஏராளமான நபர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படாமல் உள்ளது.
விஜய் டிவி பாரதி கண்ணம்மா வினுஷா தேவி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
ஏனெனில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று பொங்கல் தொகுப்பை பெற்று வருகின்றனர். மேலும் தனிநபர் இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. அதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கும். ஆதலால் டோக்கன் முறையில் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்து பொங்கல் தொகுப்பை விரைவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.