தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் தீவிரமடையும் கொரோனா – ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கொரோனா தமிழ்நாடு, கேரளா உட்பட 8 மாநிலங்களில் அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் 28 மாநிலங்களில் ஓமைக்ரான் பரவலும் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இதனால் தொற்று பாதித்த மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் உள்ளன. இந்த வகையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் புத்தாண்டு முதலே கொண்டாட்டங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனை தொடர்ந்து ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
TNPSC தேர்வெழுத தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள்!
கொரோனா விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் கொல்கத்தாவில் கொரோனா தொற்று அதிகளவில் உறுதியாகி உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்த வகையில் 28 மாநிலங்களில் கொரோனாவை தொடர்ந்து ஓமைக்ரான் பரவலும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.