மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 10.01% உயர்வு – அரசாணை வெளியீடு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 10.01% உயர்வு - அரசாணை வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 10.01% உயர்வு - அரசாணை வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 10.01% உயர்வு – அரசாணை வெளியீடு!

தெலுங்கானா மாநிலத்தின் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படியானது கடந்த மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூலை 1 ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் 7.28 சதவீதத்தில் இருந்து 17.29 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு கொரோனா கால பொருளாதார பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட நிதிச்சுமையை சமாளிக்கும் பொருட்டு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை 2020 ஜனவரி 1 முதல், ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 வரை மூன்று தவணைகளாக நிறுத்தி வைத்திருந்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஊழியர்கள் மத்திய அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் விளைவால் இந்த மூன்று தவணைகளுக்கும் சேர்ந்து 11% DA உயர்த்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு அவை கடந்த ஜூலை மாதத்தில் தான் வழங்கப்பது.

தமிழக அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!

மத்திய அரசை பின்பற்றி பல மாநில அரசுகளும் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்தி வைத்திருந்தது. அதன்பின்னர் தற்போது தான் படிப்படியாக பல மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. இதேபோல், தெலுங்கானா மாநிலத்திலும் ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் டிஏவின் மூன்று தவணைகளுக்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான காலத்திற்கான அகவிலைப்படியானது 10.01 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

ICC 2021 ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் 2 இந்திய வீரர்கள் தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

அதில், அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றிற்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2021 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். அதன்படி ஜூலை 1 முதல் பணப் பலனுடன் அடிப்படை ஊதியத்தில் 7.28 சதவீதத்தில் இருந்து 17.29 சதவீதமாக அகவிலைப்படி மொத்தம் 10.01 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்காக அரசு ஊழியர்கள் அனைவரும் 2 வருடங்களாக காத்திருக்கின்றனர். தற்போதைய அறிவிப்பினால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!