ICC 2021 ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் 2 இந்திய வீரர்கள் தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!
2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 50 ஓவர் மகளிர் ஒரு நாள் போட்டியின் 11 பேர் கொண்ட அணியை ICC அறிவித்தது. இதில் இந்திய மகளிர் அணியில் 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்:
ஐசிசி 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஒரு நாள் போட்டியின் 11 பேர் கொண்ட அணியை இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. இதில் இந்திய மகளிர் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினர். இதில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் கடந்த ஆண்டு 6 அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை – சங்கம் வலியுறுத்தல்!
39 வயதான ஜூலன் கோஸ்வாமி 2021 ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது பௌலிங்கை தாக்குபிடிக்க முடியாமல் பல பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். ஒரு நாள் போட்டிகளில் ஜூலன் கோஸ்வாமி 3.77 சராசரி வைத்து இந்திய மகளிர் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இந்திய அணி வெற்றி பெற ஜூலன் கோஸ்வாமியின் பௌலிங் ஒரு முக்கிய பங்காக கருதப்படுகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டில் பெயரை நீக்குவது எப்படி?
2021 ICC மகளிர் ஒருநாள் அணி: லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), டாமி பியூமண்ட் (இங்கிலாந்து), மிதாலி ராஜ் (இந்தியா), ஹீதர் நைட் (கேட்ச், இங்கிலாந்து), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), மரிசான் கப் ( தென்னாப்பிரிக்கா), ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா), பாத்திமா சனா (பாகிஸ்தான்), ஜூலன் கோஸ்வாமி (இந்தியா), மற்றும் அனிசா முகமது (மேற்கிந்திய தீவுகள்).