தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் மே1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகள் மூடல்:
தமிழகத்தில் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் போது தடுப்பு பணியாக வெகு நாட்களாக மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தது. நோய்த் தொற்று விரைவாக பரவி வரும் இந்த நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் மதுப் பிரியர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூடுவர் இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை அதன் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பகுதி நேரமாக மது விற்பனை நடைபெற்றது. கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு மதுப் பிரியர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
CSK அணியின் கேப்டன் ‘தல’ தோனியின் 7ம் எண் ஜெர்சி சீக்ரெட் இது தான்? ரசிகர்கள் உற்சாகம்!
இந்த ஊரடங்கு காலத்தில் மதுபாட்டில்களின் விலை அதிகரித்தது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட கோரிக்கை எழுந்துள்ளது. இன்று சென்னையில் பாமகவின் 20-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் அன்று டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.