“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய KPY சதீஸ் – ரசிகர்கள் ஷாக்!
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த KPY சதீஸ் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.
பிக்பாஸ் எலிமினேஷன்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொடக்கமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி தலத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் இரண்டு வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார். அதன் பின் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
சமையல் அம்மாவுடன் திருமணம் பற்றி சொல்லும் ஹேமா, சண்டை போடும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. டிவியில் பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் தற்போது வெளியான ஓடிடி தள வீடியோவிற்கும் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவது தான் இப்படி சர்ச்சைகள் ஏற்பட காரணம் ஆகும். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன் படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்த KPY சதீஸ் மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேறி இருக்கிறார். அவர் வந்து இரண்டு வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், அதற்குள் அவர் வெளியேறி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி 50 நாட்கள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வந்த இரண்டு வாரத்திலேயே அவர் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.