தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் நாளை (ஜன.9) ஒரு நாள் மட்டும் அமல்படுத்தப்பட இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அடைப்பு
கொரோனா 3ம் அலைத்தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு அறிவிப்பின் படி, நாளை (ஜன.9) ஞாயிற்று கிழமையை முன்னிட்டு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட இருக்கிறது.
DRDO இல் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய சேவைகளான மருந்து விநியோக பால் விநியோகம், சரக்கு வாகனங்களின் இயக்கம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையுடன் பணிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவிர பொது போக்குவரத்துக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை (ஜன.8) முழு ஊரடங்கை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கை மீறினால் ரூ.25000 அபராதம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து, சில மாதங்களுக்கு முன்பு தான் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து நேர தளர்வுகளுடன் முழுவதுமாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மீண்டுமாக மூடும்படிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாளை (ஜன.9) ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பது கவனிக்கத்தக்கது