இரவு நேர ஊரடங்கை மீறினால் ரூ.25000 அபராதம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கம் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் உள்ளதால் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் ஹோட்டல்கள் மற்றும் மால்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் அதிகளவு பீதியில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருமோ என அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த வகையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மும்பை, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்களின் பட்டியல் – முழு விபரம் இதோ!
முழு ஊரடங்கு அன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மூலம் முழுவதுமாக கொரோனா பாதிப்பை குறைக்க முடியாது. இருப்பினும் மக்களும் அந்த அளவிற்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் அசாம் அரசு இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை ஜனவரி 8 முதல் அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? முக்கிய தகவல்!
இந்த வகையில் அலுவலகங்களில் இரவு நேரங்களில் பார்க்கப்படும் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டுப்பாடு அறிவிப்பு அடிப்படையில் பார்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை எந்த ஒரு பொது இடங்களிலும் அனுமதிக்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. இந்த வகையில் தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கும் மால்கள், உணவகங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.