தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு விற்பனை!
தமிழகத்தில் இன்று மே தின விடுமுறையை முன்னிட்டு நேற்று ஒருநாள் மட்டும் ரூ. 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மது விற்பனை:
தமிழக அரசுக்கு மற்ற துறைகளை விட டாஸ்மாக் முக்கிய வருவாயை ஈட்டித் தருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலங்கள், நிறுவனங்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டது. மற்ற கடைகளை தொடர்ந்து மது கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
IRCTC ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – ரத்து செய்தால் உடனடி ரீபண்ட்!
மேலும் மதுக்கடை திறப்பிற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இதனால் அரசும் வருவாய் இழப்பை சந்தித்தது. அதே போல இரண்டாம் அலையின் போதும் மதுக்கடைகள் மூடப்பட்டது. அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்ததும் பகுதி நேரமாக மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபானங்களின் விலையும் சற்று உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இன்று மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்றே மது பிரியர்கள் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். அந்த வகையில் நேற்று மட்டும் ரூ. 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 54 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 52 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.