IRCTC ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – ரத்து செய்தால் உடனடி ரீபண்ட்!
இந்தியாவில் உள்ள ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் வெளியாகி உள்ளது. இனிமேல் ரயில் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பணம் பெற்று கொள்ளலாம். இந்த செயல்முறையை தற்போது IRCTC அறிமுகப்படுத்தி உள்ளது.
IRCTC டிக்கெட்:
இந்திய ரயில்வே மக்களுக்கான சிறந்த பல சலுகைகளை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக ரயில் முன்பதிவு திட்டம். இந்த திட்டம் மக்களுக்கு அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதன் மூலம் மக்கள் தங்களுக்கு வேண்டிய தேதிகளில் வேண்டிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும் ரயிலில் உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதியுடன் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய உத்தரவு 2022 – தேர்வர்கள் அதிர்ச்சி!
இந்த ஆப் ஏற்கனவே செயலில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து, தற்போது ஒரு ரயில் டிக்கெட் சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டால் அதற்கான பணம் வெகு நாட்கள் கழித்து தான் வரும். ஆனால் தற்போது IRCTC iPay இந்த ஆப்பின் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை கீழே முழுமையாக பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
IRCTC என்ற ஆம் மூலம் முன்பதிவு செய்ய, முதலில் http://www.irctc.co.in இல் உள்நுழையவும். அதன் பின்னர் பயணம் தொடர்பான இடம் மற்றும் தேதி போன்ற விவரங்களை நிரப்பவும். ‘IRCTC iPay’ என்ற முதல் விருப்பத்தை தேர்ந்தெடுத்து, ‘பணம் செலுத்துதல் மற்றும் முன்பதிவு செய்தல்’ என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்படும், அதன் உறுதிப்படுத்தலை நீங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறுவீர்கள். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், கட்டண விவரங்களை மீண்டும் நிரப்ப வேண்டியதில்லை, உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அதனை தொடர்ந்து தேவை ஏற்படின் ரத்து செய்தால் உடனடியாக பணத்தைத் திரும்பப் பெறலாம்.