தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு – தேர்தல் எதிரொலி!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு - தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு - தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு – தேர்தல் எதிரொலி!

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதியன்று நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

டாஸ்மாக் அடைப்பு

கடந்த மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 3ம் அலைப்பரவல் தொற்று ஓய்ந்துவந்ததற்கு பிறகு, தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அதே போல தற்போது டாஸ்மாக் கடைகளும் வழக்கமான நேரத்தில் செயல்பட துவங்கியுள்ளன. இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மீண்டும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

அதாவது, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பிப்ரவரி 19ம் தேதியன்று பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மின் வாரியத்துக்கு அளித்த அதிரடி உத்தரவு – வடமாநில பணியாளர்கள் அச்சம்!

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நாளை (பிப்.17) முதல் அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில், பிப்.17 காலை 10 மணி முதல் பிப்.19 நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான பிப்.22 அன்று அனைத்து மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகளையும் மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!