தமிழக அரசு மின் வாரியத்துக்கு அளித்த அதிரடி உத்தரவு – வடமாநில பணியாளர்கள் அச்சம்!
தமிழகத்தில் மின்வாரிய துறைக்கு, தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் வட மாநிலங்களில் இருந்து மின்வாரிய துறையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் இடையில் அச்சமும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.
அதிரடி உத்தரவு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் அண்மையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – ஒரே தவணையில் வழங்க முடிவு!
ஆனால் மின் வாரிய பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் வட மாநிலத்தவர்கள் உள்ளனர். இந்த நிலையில் தமிழ் பாடத்தை படிக்காமல் மின் வாரிய பணிக்கு தேர்வானவர்கள், பணியில் சேர்ந்ததில் இருந்து 2 ஆண்டுகளுக்குள், TNPSC நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த உத்தரவு அடிப்படையில் TNPSC நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாத பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்கு பணியாளர்கள் அளிக்கும் விளக்கம் சரியானதாக இல்லை என்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
இதையடுத்து இந்த அறிவிப்பு குறித்து, மின்வாரியத்தில் தமிழ் தெரியாமல் வேலைக்கு சேர்ந்த சிலர், தமிழ் மொழி தேர்வில் இன்னமும் தேர்ச்சி பெறவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. இதற்கு மின் வாரியத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில் கடந்த 2011 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில், வெளிமாநிலங்களில் இருந்து வாரியத்தில் பணிக்கு சேர்ந்தவர்களில்,தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எத்தனை பேர், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ஆகிய விபரங்களை விரிவான அறிக்கையாக விரைவில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வடமாநில ஊழியர்கள் மத்தியில், வேலை போய்விடுமோ என்று அச்சம் நிலவி வருகிறது.