சென்னை: நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே இருந்தது. இதற்கு ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் போர் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது போர் முடிந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை குறைவு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பணத்தை முதலீடு செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வந்தனர். ஏனெனில் தங்கத்தை கொண்டு சுலபமான முறையில் கடன்களை பெறலாம். மேலும் கடன் பெறும் போது அன்றைய தங்கத்தின் விலையை கொண்டு கணக்கிடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சென்னையில் கடந்த 5ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.36,336க்கும், 7ம் தேதி ரூ.36,360க்கும், 8ம் தேதி ரூ.36,464க்கும், 9ம் தேதி ரூ.36,672க்கும், 10ம் தேதி ரூ.36,808க்கும், 11ம் தேதி ரூ.36,880க்கும் விற்கப்பட்டது.
தமிழக அரசு மின் வாரியத்துக்கு அளித்த அதிரடி உத்தரவு – வடமாநில பணியாளர்கள் அச்சம்!
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்ததை தொடர்ந்து கடந்த 12ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.840 அதிகரித்தது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.37,720க்கும் விற்கப்பட்டது. மேலும் நேற்று காலையிலும் சவரனுக்கு ரூ.344 அதிகரித்தது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தொடும் வகையில் ரூ.37,904க்கும் விற்பனையானது. இவ்வாறு தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் ரஷ்யா-உக்ரைன் இடையே உள்ள போர் பதற்ற சூழ்நிலையே என்று பல்வேறு தரப்பினர் கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – ஒரே தவணையில் வழங்க முடிவு!
தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.37,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.67,80க்கு விற்பனை செய்யப்படுகிறது.