மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – ஒரே தவணையில் வழங்க முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகை ஒரே தவணையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு 2 லட்சம் வரை தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நிலுவைத் தொகை:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு கடந்த 2021 ஜூலை மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31%அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அகவிலைப்படி நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்த பட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் 34 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அகவிலைப்படி 34 சதவீதம் அளிக்கப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் ரூ.6,120 வரை கூடுதல் தொகை பெறுவார். அடிப்படை சம்பளம் ரூ.56,900 எனில் 34 சதவீத அகவிலைப்படி உயர்வின் படி ரூ.19,346 கூடுதல் தொகையாக கிடைக்கும். தற்போது நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மார்ச் 2 வரை நீட்டிப்பு! முழு விபரம் இதோ!
இதனையடுத்து நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை ஒரே தவணையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சுமார் 1,44,200 ரூபாய் முதல் 2,18,200 ரூபாய் வரை மொத்தமாக கிடைக்கும். இதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பயன்பெறுவர். இந்த நிலுவை தொகை அறிவிப்பு குறித்து மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு போன்ற தகவலும் வந்துள்ளது.