மதுபானக் கடைகள் திறப்பு ஒழுங்கு முறைகள் – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

0
மதுபானக் கடைகள் திறப்பு ஒழுங்கு முறைகள் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!
மதுபானக் கடைகள் திறப்பு ஒழுங்கு முறைகள் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!
மதுபானக் கடைகள் திறப்பு ஒழுங்கு முறைகள் – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

போபால் நகரத்தில் ஊரடங்கு தளர்வுகளில் மதுபான கடைகள் திறந்திருப்பது குறித்து மக்களின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அவ்னாஷ் லாவனியா விளக்கம் அளித்துள்ளார்.

அதிகாரியின் விளக்கம்:

கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவினால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போபால் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தது. அரசு உத்தரவை தொடர்ந்து அங்கு ஜூன் 1ம் தேதியான நேற்று முதல் மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை இந்த கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இதனை எதிர்த்து சமூக ஊடக தளங்களில் பல புகார்கள் எழுந்துள்ளது. நேற்று முதல் மற்ற கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மதுபான கடைகள் இரவு 11:30 வரை செயல்பட வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் அருண் ரத்தோர், மதுபானக் கடைகளின் நேரம் குறித்து கேட்டபோது, கலால் விதிகளின்படி கடைகள் செயல்படும் என்றார்.

‘CBSE பொதுத்தேர்வு ரத்து சிறப்பு மிக்க முடிவு’ – மத்திய கல்வி அமைச்சர் வரவேற்பு!!

கலால் விதிகளின்படி மதுபானக் கடைகள் இரவு 11.30 மணி வரை திறந்திருக்க முடியுமா என்று கேட்டதற்கு முடியும் என தெரிவித்துள்ளார். போபாலின் உதவி கமிஷனர், கலால், மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் 2021 ஜூன் 1 முதல் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறும் கடைகளின் உரிமையாளர் அல்லது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!