‘CBSE பொதுத்தேர்வு ரத்து சிறப்பு மிக்க முடிவு’ – மத்திய கல்வி அமைச்சர் வரவேற்பு!!
CBSE பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனை பல நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தேர்வுகளை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என மத்திய கல்வி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து:
கடந்த மாதம் 4 ஆம் தேதி CBSE மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலேசனைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனால் CBSE தேர்வுகளை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 1) திடீரென அவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். மேலும் பிரதமர் மோடியுடன் மத்திய இடைநிலை கல்வி வாரிய தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், மாநில கல்வித்துறை அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா இல்லாத கிராமங்களுக்கு ரூ.5 லட்சம் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் இந்த சிறப்பு மிக்க முடிவை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்பார்கள் என நம்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.