தமிழக கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4000 நிதியுதவி – முதல்வர் நாளை வழங்கல்!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அரசு சார்பில் ரூபாய் 4000 உதவித்தொகை மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலான அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
உதவித்தொகை :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் அவர்கள் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்தார். மேலும் இந்த ஊரடங்கு தளர்வில்லா கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக எந்த கடைகளும், அலுவலகங்களும், நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. காய்கறி, மளிகை கடைகள் இயங்கவும் அரசு தடைவிதித்துள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இவர்களை காக்கும் பொருட்டு அரசு சில நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர் உட்பட பிற பணியாளர்களுக்கு உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது. கோவில்கள் ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. தெய்வ வழிபாடு பக்தர்களின்றி கோவில் ஊழியர்களின் மூலம் மட்டுமே நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் இல்லாததால் கோவில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் நிலையான மாத வருமானம் இன்றி கோவில் பூசாரிகள் தவிக்கின்றனர்.
மதுபானக் கடைகள் திறப்பு ஒழுங்கு முறைகள் – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!
இதனை கருத்திற்கொண்டு அரசு சார்பாக இந்து அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களின் பூசாரிகள், பட்டாச்சாரியர்கள் போன்றோருக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதோடு சேர்த்து 1000 ரூபாய் மதிப்புள்ள 15 வகை மளிகை பொருட்கள் , 10 கிலோ அரிசி போன்றவை வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 14,000 திருக்கோவில் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த திட்டம் நாளை (ஜூன் 3ம் தேதி) முதல் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்படுகிறது.