தமிழகத்தில் மக்களவை பொது தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும் தேர்தல் அமைதியான முறையில் நடத்துவதற்காக காவல்துறையினர், ராணுவ படையினர் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அனைத்து விதமான மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TET தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – மிஸ் பண்ணிராதீங்க || சூப்பர் வாய்ப்பு!
அதாவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார் .அதாவது இன்று காலை 10 மணி முதல் நாளை மறுநாள் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்ற அறிவிப்பால் அனைத்து மது பிரியர்களும் டாஸ்மாக் கடைகளில் முந்தி அடித்துக்கொண்டு மது வகைகளை வாங்கி சென்று வருகின்றனர்.